கொங்கு துளுவ பிள்ளை
(திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல் புத்திரவர்க்க
முடவாண்ட கவுண்டர்கள் 
சரித்திரம்)
பொருளடக்கம்
| 
   1  | 
  
   ஆசிரியர் உரை   | 
 
| 
   2  | 
  
   முன்னுரை   | 
 
| 
   3  | 
  
   நடு நாடு (மகதை கொங்கம்)   | 
 
| 
   4  | 
  
   திருவெண்ணைநல்லூர்   | 
 
| 
   5  | 
  
   வெள்ளாள அரசர் சடையப்பவள்ளல்   | 
 
| 
   6  | 
  
   சிவனார் அருள்   | 
 
| 
   7  | 
  
   சனீஸ்வரர் தவக்குழந்தை   | 
 
| 
   8  | 
  
   அப்பாஜி ராயர்   | 
 
| 
   9  | 
  
   துளுவ நாயக்கர் வளர்ப்பு   | 
 
| 
   10  | 
  
   குலகுரு குழந்தையானந்தர்  | 
 
| 
   11  | 
  
   கொங்கில் முறைமை பெற்றது   | 
 
| 
   12  | 
  
   நம் சமூக மிராசும், அந்தஸ்த்தும்   | 
 
| 
   13  | 
  
   19 ஆம் நூற்றாண்டின் இடப்பெயர்வு   | 
 
| 
   14  | 
  
   குலகுரு குழந்தையானந்த ஸ்வாமிகள்   | 
 
| 
   15  | 
  
   குழந்தையானந்த குலகுருவிற்கு சிஷ்யர்களாகிய
  நாம் செய்ய வேண்டிய கடமை  | 
 
| 
   16  | 
  
   மடத்தின்  சிவபூஜையும் நம் நலனும்   | 
 
| 
   17  | 
  
   குலகுருமடத்திற்கு செய்யவேண்டிய கடமைகள்  | 
 
| 
   18  | 
  
   21 ஆம் நூற்றாண்டில் மீட்டுருவாக்கம்   | 
 
| 
   19  | 
  
   தனி வகுப்பு சான்றிதழ் பயணம்   | 
 
| 
   20  | 
  
   பின்னிணைப்பு 1 – நம் வரலாற்று பட்டயம்   | 
 
| 
   21  | 
  
   பின்னிணைப்பு 2 – ஆதியானந்த குருவிடம் உள்ள நம்முடைய ஊர்த்தொகை  | 
 
| 
   22  | 
  
   பின்னிணைப்பு 3 - ஆதியானந்த குரு மடத்தின் சேவுகர்  அரசு அடையாள வில்லை    | 
 
| 
   23  | 
  
   பின்னிணைப்பு 4 - பிற்கால ஆதியானந்த குருஸ்வாமிகளின்
  சஞ்சார வசூல் ரிக்கார்டுகள்  | 
 
| 
   24  | 
  
   பின்னிணைப்பு
  5 - பிற்கால ஆதியானந்த குருஸ்வாமிகளின் வரலாற்று பட்டயம்  | 
 
| 
   25  | 
  
   பின்னிணைப்பு
  6 – பிற்கால குருவான ஆதியானந்த குருஸ்வாமிகள்    | 
 
| 
   26  | 
  
   பின்னிணைப்பு
  7  - ஆதிக்குலகுருவான குழந்தையானந்த
  குருஸ்வாமிகள்  | 
 
| 
   27   | 
  
   ஆதாரங்கள்   | 
 
ஆசிரியர் உரை 
            “கொங்கு துளுவ பிள்ளை” எனும் சமூகம் தமிழகத்தில் எந்த விதபிரிவிலும் கொண்டு வராமல் தனிமைப்படுத்தி கடந்த 75 ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்டு அடையாளம் தெரியாமல், அடையாளம் மறைகிற நிலைக்கு தள்ளி அவர்தம் பண்பாடு, பழக்கவழக்கம், பெருமை ஆகியவற்றை மறைக்கும் விதமாக செயல்பாடுகள் அமைத்துவிட்டது. ஒரு லட்சம் பேருக்கு மேல் கொங்கு மண்டலத்தில் 580 க்கு மேற்பட்ட ஊர்களில்  பரவி வாழும் நம் சமூக அடையாள இழந்து போனதை உணர்ந்த நம்சமூக உணர்வாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கொங்கு துளுவ பிள்ளைகளின் சரித்திரம் பீனிக்ஸ் பறவையாக 21 ஆம் நூற்றாண்டின் வீரிட்டு எழுகிறது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையாது. அதுபோல, வெள்ளாள நாட்டாரான சடையப்ப வள்ளலின் பேர் உள்ளவரை அவர்தம் புத்திரவர்க்கமான கொங்கு துளுவ பிள்ளைகளின் வரலாறும் நீடித்து இருக்கும். இந்நூலானது, 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சத்தியமங்கலம் முடவாண்டார் பட்டயம், 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆதியானந்த மடத்து கொங்கு துளுவ பிள்ளைகளின் பட்டயம், பிரிட்டிஷ் ஆவணங்கள் மற்றும் சமூக மக்களின் செவிவழி வரலாற்று செய்திகள் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு களஆய்வு செய்தமட்டில் கிடைத்த தரவுகளையும் வைத்து எழுதப்பட்டுள்ளது. இந்நூலை, எழுதுவதற்கு  உறுதுணையாக இருந்த நம் சமூக மக்களுக்கும், நம் தந்தை  வம்சமான தென்தலை கொங்கு வெள்ளாள மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.  
மேலும், இது போன்ற அடையாளம் மறைக்கப்பட்ட கொங்க வடதலை வெள்ளாளர், இளமன் வெள்ளாளர்கள், கொங்க புலவனார்கள், பட்டன், பண்பாடி, தக்கைகொட்டி, கூத்தாடும் பெருமாள், போன்ற பழந்தமிழ் பாணர்கள், , பாம்பைக்காரர்கள் போன்ற சமூகங்களின் வரலாற்றையும் முறையே ஆவணப்படுத்தவோம். வரலாறும், சமூகமும், பண்பாடும் காப்போம்.     
முன்னுரை 
அடையாளம் என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கு பெயராகவும், வீட்டுக்கு கதவு எண் முகவரியாகவும், ஒரு நிலத்திற்கு புல எண்ணாகவும் இவ்வுலகில் தேவைப்படுகிறது. செடி கொடிகள் முதல்  மனிதன் வரை இன்றைய அறிவியல் அவற்றின் பெயர், இனப்பெயர், குடும்பம், குழுமம், எனப் பலவரையறைகள் வைத்துள்ளது. அதுபோல, மனித சமூகத்தில் அடையாளம் என்பது புராதனகாலம் முதல் நவீன காலம் வரை பல்வேறு வகையில் பிரித்து அடையாளம் காணப்பட்டு வருகிறது. வரலாற்றில் மனித சமூகம் அடையாளம் காணமுடிகிறது என்றால் அதற்கு அடிப்படையாக இருப்பது சமூக புவியியல் பிரிவினையே. புவியான மண்ணைக்கொண்டே வளங்கள் உருவாகின்றன. வளங்களை கொண்டு மனித சமூகம் மண்ணில் குடியேறுகையில் வளத்தின் தேவையை பொறுத்து சமூக/குடி தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறாக  பிரித்து பல தொழில்களை மேற்கொண்டு சமூக பங்காற்றுகிறது,  அத்தொழிலில் கைதேறும் குடிகள் தன் மணவினைகளுக்கு குடும்பத்திற்க்கு என தனிநெறியை வகுத்து அதற்க்குள் வாழ்கின்றன. உழவு, நெசவு, வாணிபம் என ஆரம்பித்து உற்பத்தி முதல வணிகம் வரை சமூகத்தில் பல குடிகளாக பரிணமிக்கின்றன. கால ஓட்டத்தில் இவை தன்னையும் காத்து, தன் சந்ததியினரையும் காத்து பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்று வரலாறை படைக்கிறது. நம் நாட்டிலோ, குடி அமைப்பு முறையை ரிஷிகள் / சித்தஞானிக்கள் தேசங்களுக்கு ஏற்ப வகுத்து, இயங்க வைத்துள்ளனர். அவ்வியக்கமே இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்தை இயங்க வைத்துவந்துள்ளது. நமிழ்நாட்டில் அகத்தியர், போதாயனர் போன்றோரின் சமூககட்டமைப்பு முறை அரசர் காலம் தொட்டு இருந்து வருகிறது.
இந்திய திருநாட்டில் குறிப்பாக தமிழ் கூறும் நல்லுலகில் இந்த தொன்மையான வரலாறு இடங்களுக்கு தக்கவாறு கொட்டிக்கிடக்கிறது. பல ஆயிரம் வருடங்களாக நிலத்தை குறிஞ்சி முதல் பாலை வரை திணைகளை வகுத்து அகத்திய தொல்காப்பிய இலக்கணப்படி வாழ்த்து பல தேசங்களை, பண்பாடுகளை உருவாக்கி நூற்றுக்கணக்கான குடிகளை சமூகசார்பு தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கி தமிழக மண்ணின் மைந்தர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் வேளிர் மரபில் வந்தவர்கள் காஞ்சீபுரத்தை தலைநகராக கொண்டு வாழ்ந்து, பின்னர் சேர, சோழ, பாண்டிய, தொண்டை, நடு நாடு என பிரிந்து ஐந்து தேசங்களாக அரசாட்சியுடன் வாழ்ந்தனர். 
அகத்தியருடன் பதினெட்டு வேளிர் மரபில் வந்த அரசன், அந்தணர், வணிகர், வேளாண் மாந்தர் ஆகிய நாற்பிரிவினர் பலவிதமான அனுலோம குடிகளை உண்டாக்கி சமூகங்களை ஊர்வாரியாக உருவாக்கினர். இதில் தவறுதலாக பிரதிலோமத்தில் உண்டான குடிகளை சமூகத்தில் ஒருங்கிணைந்து நிலம், வளம், ஆகியவற்றின் சமநிலைக்கும் சமூக ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் வராமல் காத்துவருகின்றனர். 
நடுநாடு (மகதை கொங்கம்) 
    இத்தகைய நெடிய வரலாற்றில் நடுநாடு என அறியப்பட்ட தென் மகதம் என்றும், மகதை கொங்கு எனவும் அறியப்பட்ட பகுதியான இன்றைய ஆத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் (அதாவது தெனபெண்ணையாற்றிற்கு தெற்கு, வட வெள்ளாற்றுக்கு வடக்கு, வில்லிமலைக்கு கிழக்கு, குணகடலுக்கு மேற்கு என இந்நாற்பங்கு எல்லைகளுக்குள் உள்ள பகுதி) ஆகியவற்றை கார்மண்டலத்து வேளிர் மரபை சாரந்தோர் ஆண்டு வந்தனர். பதினென்குடி வேளிரான மலையர் குல மலையமான்களும், பிற்காலத்தில் வாணர்களும், களப்பிரர்களாளும் ஆளப்பட்ட பகுதியாக நடுநாடு விளங்குகிறது.     
            திருக்கோயிளூரை தலைநகராக கொண்டு மலையமான்கள் அந்த நடுநாட்டில் திருவெண்ணைநல்லூர் பகுதியில் “வெளிர் மரபு நாட்டாராக விளங்கிய சடையப்ப வள்ளல் என்பவரது வழித்தோன்றலாக புத்திரவர்க்கமாக அறியப்படும் இந்நூலின் நாயகர்களாகிய முடவாண்டார்கள் எனும் கொங்கு துளுவ பிள்ளைகளின் வரலாறும் துவங்குகிறது. 
திருவெண்ணைநல்லூர் 
            வெண்ணை பண்ணை சடையா என கம்பர் வேளிர் மரபில் வந்த சடையப்ப வள்ளலளை கம்பராமாயணத்தில் குறிக்கின்றார். கம்பராமாயணத்தை இயற்ற முதலில் ஆதரித்த சாளுக்கிய சோழனான மூன்றாம் குலோத்துங்கன் கைவிட, வேளிர் மரபில் வந்த வெண்ணைநல்லூர் சடையன் உதவியுடன் 13 ஆம் நூற்றாண்டில் கம்ப இராமாயானத்தை இயற்றி வாரங்கல் ராஜா பிரதாபருத்திரன் உதவியுடன் சோழநாட்டில் அரங்கேற்றினார் என்பது வரலாறு. 13 ஆம் நூற்றாண்டில் திருவெண்ணைநல்லூர் வேளிர் குல சடையப்பரால் ஆளப்பட்டு வந்துள்ளதை அறியமுடிகிறது. 
வெள்ளாள நாட்டார் சடையப்பவள்ளல்
சடையப்ப வள்ளல்
பண்ணை குலத்தை  சார்ந்தவர் என்பதை கொங்கு
மண்டல சதகம் குறிக்கிறது. சடையப்ப வள்ளலின் முன்னோர்களே ரகு வம்சத்தில் வந்த
ராமனுக்கு முடியெடுத்து கொடுத்தனர் என்று குறிப்பிடுகிறார். சூரிய வம்சத்தில்
கங்கை குலத்தில்உற்பவித்த காராள வம்சத்தில் சடையப்ப வள்ளல் வழிதோன்றலாக
வந்துள்ளனர் என்பது புலனாகிறது. நற்குடி நாற்ப்பத்தெண்ணாயிரம் வேளாளர் என
அழைக்கப்படும் வேளிர் பிரிவு காஞ்சியை தலைநகராக கொண்டு தொண்டைமண்டலத்தை சேர்ந்த 79
வளநாடுகளையும் ஆண்டு வந்தனர். தொண்டை மண்டலத்திற்கு நாற்ப்பத்தெண்ணாயிரம் பூமி
எனவும் பெயர் உண்டு. 79 நாட்டார்கள் சோழர்
காலத்தில் தென்னிந்தியா முழுவதும் சோழப்பேரரசை கட்டமைக்க நாட்டார்களாக
நியமிக்கப்பட்டு ஆண்டு வந்தனர். அத்தகைய ௭௯ நாட்டார் வழிவந்த பண்ணை குல சடையப்ப
வள்ளலும் நடுநாட்டை திருவெண்ணெய்நல்லூரை சோழர் காலத்தில் ஆண்டு வந்துள்ளார் என்பதை
வரலாற்றின் மூலம் அறியமுடிகிறது. 
சிவனார் அருள்:
               சடையப்ப வள்ளல் கம்பராமாயணத்தை விரும்பியும் சைவத்தை
பின்பற்றியும் பேதமற வேதவழியில் வாழ்ந்து வந்துள்ளார். சடையப்ப வள்ளலுக்கு நீண்ட
நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்து சிவபெருமானை வேண்டி குழந்தை வரம் பெற்றார். சிவனருளால்
சடையப்ப வள்ளல் மனைவி கர்ப்பவதியானாள். 
சனீஸ்வரர் தவக்குழந்தை
               பூரண கர்ப்பவாசம்
முடிந்து சடையனார் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது, விதிவசத்தால முன்பிறவியில்
செய்த கர்மவினையால் அக்குழந்தை இருகால் முடமாக பிறந்தது. அது கண்டு துக்கமடைந்த
சடையப்ப வள்ளல் தன்குருவான  திருவள்ளுவ
நாயனார் வம்சத்தை சேர்ந்த குழந்தையானந்த சுவாமிகளை அழைத்து என்ன செய்யவேண்டுமென்று
கேட்டு ஓலை எழுதி தங்கபேழையில் வைத்து ஆற்றில்விட்டனர். சனி தோஷத்தால் அவதரித்த அக்குழந்தை காவேரி ஆற்றில்விடப்பட்டது.  
அப்பாஜி ராயர் 
            விஜயநகர சாம்ராஜ்யத்தில் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கம, துளுவ அரசர்கள் ஒன்பது பேருக்கு பிறகு
வாழ்ந்த  அப்பாஜிராயர்  என்பவர் காவேரியில் தங்கபேழையை கண்டெடுத்து
பேழை எனக்கு உள்ளே உள்ளது உனக்கு என தன்னுடன் வந்த துளுவ நாயக்கர் மந்திரியிடம்
தெரிந்து பேழையை எடுக்கின்றனர். உள்ளிருந்த குழந்தை மற்றும் திருவள்ளுவ வம்ச
குழந்தையானந்தரின் ஓலையை படித்து அதன்படி அக்குழந்தையை துளுவநாயக்கர்
வளர்க்கின்றனர் .  கம்பரை ஆதரித்த சடையப்ப
வள்ளல் 13 ஆம் நூற்றாண்டில வாழ்ந்தவர். 16 நூற்றாண்டில் குழந்தை அப்பாஜிராயரால்
கண்டெடுக்கப்பட்டது என்பது கால முரணாக தோன்றுகிறது. எனினும், சடையப்ப வள்ளலின் வழியில் தோன்றியவர்களுக்கு பிறந்த குழந்தையாக இருக்க வேண்டும் என கருத வேண்டும். 
துளுவ நாயக்கர் வளர்ப்பு 
            துளுவ நாயக்கர் சடையப்ப வள்ளல் வம்சத்தில் குழந்தையை வளர்த்து வாலிபனாக்கி சடையப்ப வள்ளலிடம் ஒப்படைக்கின்றனர்.
சடையப்ப வள்ளல் மகனை ஏற்று தன குரு குழந்தையானந்த சுவாமிகளை அழைத்து அக்குழந்தைகளுக்கு
போர் பயிற்சிகளை கற்றுவிக்க அனுப்பிவிடுகிறார். துளுவ நாயக்கரால்
வளர்க்கப்பட்டதால் இன்று வரை முடவாண்டார் சமூகம் தங்களை துளுவ பிள்ளை என குரு
ஆதினத்தில் பெயர் வைத்த செய்தி ஆதியானந்த சுவாமிகள் பட்டயத்தின் மூலம்
அறியமுடிகிறது. 
குலகுரு குழந்தையானந்தர்
               குழந்தையானந்த சுவாமிகள்
என்பவர் சடையப்ப வள்ளலாகிய சீஷயரனின் இருகால் முடகுழந்தைக்கு  சகல போர் 
வித்தைகளையும் கற்பித்து உபதேச தீட்சை முதலானதும் செய்து வைக்கிறார்.
இன்றும் கொங்கு வெள்ளாளர்களில் பண்ணை குலத்தாருக்கு குலகுருவாக  இருந்து வருகிறார். அதோடு சடையப்ப வள்ளலின்
புத்திரவர்க்கமாகா உருவெடுத்த முடவாண்டார் கொங்கு துளுவ பிள்ளைகளுக்கு கூறுவாகவும்
இருந்து கொங்கு நாத்திரக்கு வந்த பிறகும் 
தீக்ஷை உபதேசங்கள் செய்து நம் சமுதாயத்திற்கு 19 ஆம் நூற்றாண்டு வரை காத்து
வந்துள்ளார்.  
கொங்கில் முறைமை பெற்றது 
            நடு நாட்டிலிருந்து சடையப்ப வள்ளல் மற்றும் கொங்கு துளுவ
பிள்ளைகள் தன் குலகுருவுடன் 16 ஆம் நூற்றாண்டில் சேர நாடான கொங்கு நாட்டில் உள்ள
அரையா நாட்டு பகுதியான நடந்தை என்னும் ஊரிற்கு வந்திருக்கிறார்கள். இது குலகுருவான
குழந்தையானந்த ஸ்வாமிகளின் வரலாறு மூலம் தெரிகிறது. நடந்தையிலிருந்த குலகுருவையும்
அவர்தம் சீஷயர்களான முடவாண்டார் வம்சமான கொங்கு துளுவ பிள்ளைகளையும், தென்தலை
வெள்ளாள மேல்கரை பூந்துறை   நாட்டார் காடைகுல
வரணவாசிக்கவுன்டர் அவர்கள் தன் நாட்டில் சத்தியமங்கலத்தில் ஊர் ஏற்ப்படுத்தி காணி
முறைகள் கொடுத்தார். அதோடு ஜீவனத்திற்காக சத்தியமங்கலம், செம்புதொழு,  உம்பழத்தம் , சோழனூர், புன்னைமேடு, கோட்டூர்,
ஆண்டாவந்தி ஆகிய ஏழு ஊர்களை நாட்டார் சபை மூலம் கொங்கு நாடெங்கும் துளுவ
பிள்ளைகளின் ஜீவனத்திற்காக தானமாக கொடுத்தார். உடன் எட்டாயிரம் பொன்னும்
கொடுத்தார். இதற்கு கல்வெட்டு, செப்பேடு போட்டு சந்திரா சூரியர் உள்ளளவும்
நடக்கவேண்டும் என்று சாசனம் செய்து வைத்தார். இவர்களுக்கு தென்திசை வெள்ளாளராகிய
வெள்ளாள கவுண்டர்கள் கொடுக்க வேண்டும் முறைகளும், பிற குடியினரும் கொடுக்கவேண்டிய
முறைகளையும் ஆணையாக செய்து வைத்தார் (பின்னிணைப்பு 1 இல் காணலாம்). 
            அதுமுதலாக பூந்துறை  நாட்டு சத்தியமங்கலத்தில் இருந்து கொங்கு  நாட்டில் உள்ள சடையப்ப வள்ளல் வெள்ளாள பண்ணை
குலத்தார் வீடுகளுக்கு மற்றும் இதர வெள்ளாள கவுண்டர்களின் வீடுகளுக்கும் சென்று
முடமாக பிறந்த குழந்தைகளை எடுத்து சென்று சத்தியமங்கலம் காப்பகத்தில் வளர்த்து
வந்தனர். உடன் வருடாவருடம் வளர்க்க தேவையான தானியங்களையும் பெற்று வந்துள்ளனர்.  கொங்கு தென்திசை வெள்ளாள மற்றும் துளுவ
வெள்ளாளர்களின் புத்திர வர்க்கம் ஆனதால் “பிள்ளை” 
என்ற  கொங்கு துளுவ பிள்ளை என
அழைக்கலாயினர். பிறக்கால குரு ஆவணங்களிலும் கொங்கு பிள்ளை என்றும் துளுவ வெள்ளாள
என்ற பெயரிலும் பெயர்களுக்கு பின் பிள்ளை பட்டத்துடனும் உள்ளது அறிய முடிகிறது. 
நம் சமூக மிராசும்,
அந்தஸ்த்தும் 
     கொங்கு துளுவ
பிள்ளைகளாகிய அவர்தம் மக்கள்  ஏழு
ஓவர்களில் காணியாளர்களாக வாழ்ந்தனர். மேலும் தோட்டம் தொரவு ஆகிவற்றுடன் செழிப்பாக
வாழ்ந்து வந்தனர். காணிக்கோயில்களான மேற்க்கண்ட ஏழு ஊர்களில் மிராசு
இருந்துவந்துள்ளது. இருந்தூம் வருகிறார்கள். அவ்வூர்கோயில்களில் முப்பாடு முதல்
விபூதி எடுப்பதும் நடந்து வருகிறது. கிராம பெருக்கம் காரணமாக ஊரைவிட்டு வெளிய
செல்லக்கூடிய நிலை வந்தாலும் தன் தந்தை வாரிசுகளாகிய தென்திசை கொங்கு வெள்ளாள
கவுண்டர்களால் ஆதரிக்கப்பட்டு வீடுகள் தந்து தோட்டம் தொரவு கவனித்து
மேற்பார்வையாளர்களாக இருந்து வருகிறார்கள். 
19 ஆம் நூற்றாண்டின் இடப்பெயர்வு 
     பிரிட்டிஷார்
ஆட்சி காலத்தில் பூந்துரை நாட்டு சத்தியமாங்கலத்தில் இருந்து ஆயிரகக்கானக்கான தானா
பூமியை விடுத்து, தாது வருஷ பஞ்சம் காரணமாக (1876-1878) பல ஊர்களுக்கு கொங்கு
துளுவ பிள்ளைகள் செழிப்பான பகுதிகளுக்கு கொங்கு வெள்ளாளரகளுடன் சென்றனர். அதேசமயம்,
சத்தியமங்கலத்தில் இயங்கி வந்த காப்பகம் கோவை  
முனிசிபாளிட்டிக்கு  மாற்றப்பட்டது.
காலப்போக்கில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மறைந்த அந்த காப்பகம் கொங்கு துளுவ
பிள்ளைகளில் மாற்றுத்திறனாளிகளை  சார்ந்தது
ஆகும். 
குலகுரு குழந்தையானந்த ஸ்வாமிகள் 
     சடையப்ப
வள்ளல் வமிசாவளி பாரம்பரியமாகிய, திருவள்ளுவர் நாயனார் வமிசாவளி குருவான
குழந்தையானந்த குருக்கள் கொங்கு துளுவ பிள்ளைகளுக்கு இக்குலம் / குடி பிறந்த காலம்
தொட்டு குலகுருவாக இருந்து வருகின்றனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏதோ
காரணத்தால் பூந்துறை சத்தியமங்கலத்தை சார்ந்த இரண்டு கொங்கு துளுவ பிள்ளை
குடும்பங்களே தன்னை குருவாக பிரித்து கொங்கு நாடெங்கும் சுமார் 600 ஊர்களில்
குருவாக சஞ்சாரம் செய்து வந்துள்ளனர். தன்னை ஆதியானந்த குருஸ்வாமிகள் மற்றும்
காமாட்சி குருக்கள் என்ற பெயரில் (பில்லன் மற்றும் மணியன்) பிரிட்டிஷ் காலத்தில்
டவாளி வில்லை அடையாளங்கள் கொடுக்கப்பட்டது. கொங்கு நாடெங்கும் செல்ல உரிமை
அளிக்கப்பட்டது (பார்க்க பின்னிணைப்பு -3 ). ஆனால், இன்று சத்தியமங்கலத்தில்
குழந்தையானந்த ஸ்வாமிகள் அவர்களிடத்தில் இருந்த செப்பு பட்டயம் கடந்த 600 வருட
வரலாற்றை இயம்புவதுடன் கொங்கு துளுவ பிள்ளை வரலாற்று ஆவணமாக மௌன சாட்சியாக நிற்கிறது.
குழந்தையானந்த குலகுருவிற்கு சிஷ்யர்களாகிய நாம் செய்ய
வேண்டிய கடமை:
நம்  குடிமக்கள் இடம்விட்டு புதிய இடத்தில்
குடியேறுகிற போது, தங்களுடைய காணி
தெய்வ கோயிலிலிருந்து பிடிமண் எடுத்துச்சென்று குடியேறிய இடத்தில் காணி தெய்வத்தை
ஏற்படுத்தி வாழ்க்கையை தொடர்ந்தனர்.
அதே சமயம் குலகுருவானவர் முதல் காணி இருக்கும் இடத்திலேயே
தங்கி விட்டதால் குடியேரிச்சென்றவர்களுக்கு தொடர்பு போய் விட்டது, தொடர்பு விட்டு போனாலும் தனது ஆதிகாணியை சேர்ந்தவர்கள்
நன்மைக்காக யாருடைய ஆதரவுமின்றி வம்சாவளியாக தொடர்ந்து ஆத்மார்த்த பூஜையை செய்து
வருகின்றனர்.
அவர்களிடம் குடிமக்களின் தலைக்கட்டு வரி ஓலைகளும், செப்பேடுகளும் உள்ளன. 
நம் மடமானது நாலு தலைவாசல் மடமாக இருந்து
இன்று சத்தியமங்கலம் கள்ளக்கவுண்டம்பாளையத்தில் அமைந்து இருந்தது. நம் குரு பயன்படுத்திய
பல்லக்குகள், பாதுகை, கைத்தடி போன்ற மரியாதை சின்னங்களும், ஆதி தெய்வங்கள் இன்றும் அவர்களிடத்தில் உள்ளன. நம்முடைய
மூதாதையர் வழிபட்ட ஆதிசிவ வழிபாடு மீண்டும் தொடர்ந்து இரண்டு கால வழிபாடாக நடைபெற்றிட நாம் நம்
கடமையாக எண்ணி பணி செய்திட வேண்டும்.
 
மடத்தின் சிவபூஜையும் நம் நலனும் 
குருவானவர் தாம் செய்யும் சிவபூஜையை
நிறுத்தக்கூடாது என்பது அவர்கள் சீஷயர்களுக்கு செய்த சத்தியம். சீஷயர்களானவர்கள்
குருவுக்கு வருஷ குருக்காணிக்கை மற்றும் திருமணமானால் மங்கிலிய காணிக்கை
கொடுப்போம் என்றும், உபதேசம் வாங்கி உபதேச காணிக்கை கொடுப்போம் என்றும்  சத்தியம் செய்து இது பரம்பரை பரம்பரையாக நடந்து
வருகிறது. வருடாவருடம் குருவிடம் சஞ்சாரத்தின் போது விபூதி தீர்த்த பிரசாதம்
பெற்றால் மட்டுமே நாம் பாவங்கள் விலகும். 
அவர் சிவபூஜையை நிறுத்தினால், 
இருவருக்குமே பாதகம் ஏற்படும். வருட வரி கொடுக்காவிட்டால் சிவபூஜை மடத்தில்
நடப்பது குறைபடும். சிவபூஜை குறைவு ஏற்பட்டால், சீஷயர்களுக்கு நாம் செய்யும்
தொழில் மற்றும் வாழ்க்கை மூலமாக ஏற்படும் பாவங்கள் அதிகமாகி மதிகெடும்,
ஜாதிக்குறைவு ஏற்படும், குஷ்டரோகம் ஏற்ப்படும், கல்யாண கண்டம் ஏற்படும், அந்நிய
மதம் சேர்வார்கள், முன்னோர்கள் சாபம் ஏற்படும், குலதெய்வ சாபம் ஏற்படும். ஆகையால்
மடத்தின் சிவபூஜை குறைவு படாது முறைப்படி நடக்க வழிவகை செய்துகொள்ள வேண்டும். 
குலகுருமடத்திற்கு செய்யவேண்டிய கடமைகள்:  
குருஸ்தானத்தில் வைத்து போற்றப்பட
வேண்டிய குலகுருவை கோயில் அர்ச்சகர்கள் போலவோ அல்லது பிற அய்யர் போலவோ
கருதக்கூடாது.
நம் வம்சாவளியை
ஒட்டியே குலகுருக்களின் வம்சாவளியும் வந்துள்ளது. இன்றோ குலகுருக்கள்  தங்களது வருமானத்தை செலவு செய்து வழிபாட்டை
தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
எனவே, நம் குலகுருவினை
நாடிச்சென்று, 
1.        
நல்லாசி பெறுவது வம்சத்திற்கு நல்லது. தர்மவான்கள் மடம்
கட்டி வைக்க வேண்டும்.  
2.        
சிவ வழிபாட்டிற்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, தேங்காய், பழம், நெய், முதலிய அபிஷேக
பொருட்களை வழங்குதல் வேண்டும். 
3.        
சுபமுகூர்த்த கல்யாண பத்திரிகைகளை
முதலில் காணி தெய்வத்திற்கும்,
குலகுருவிற்கும் கொடுத்தல் வேண்டும். 
4.        
காணி தெய்வக் கோயில்களில்
நடைபெறுகின்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு குலகுருக்களை அழைத்து மரியாதை
செய்யவேண்டும். 
5.        
குலகுருவிற்கு வேத சாஸ்திரத்தில்  நிபுணத்துவம் பெற்றிருப்பதால் மனம் தடுமாறுகிற
போது குலகுருவிடம் சென்று ஆலோசித்து மனம் தெளிவு பெற வேண்டும்.
6.        
நம்முடைய இளையதலைமுறைக்கு குலகுருவை
பற்றிய முழு விவரத்தையும் தெரிவித்து அவர்களோடு தொடர்பு கொள்ளும்படி செய்திட
வேண்டும். 
7.        
குலகுருக்கள் செய்கின்ற ஆத்மார்த்த
வழிபாடானது, பிற கோயில்களில் செய்வது/பார்ப்பது பராத்த பூஜையாகும்.
8.        
ஆத்மார்த்த பூஜை என்பது சிவலிங்கத்தை
இதயத்தில் வரித்து நம் ஆத்மாவாகவே பாவித்து உள்முகமாக நடைபெறுகின்ற வழிபாடாகும்.
9.        
ஆத்மார்த்த பூஜையின் போது தீபாராதனை
தட்டில் பணமோ நாணயங்களோ போடுவதை தவிர்க்க வேண்டும். 
10.     வழிபாடு முடித்தவுடன் மடத்திற்கு நாம் செலுத்த வேண்டிய காணிக்கைகளையும், வரியையும் தேங்காய் பழத்துடன் தட்டில் வைத்து குலகுருவிடம் கொடுக்க வேண்டும்.
11.     காணி தெய்வக்கோயில் கும்பாபிசேகத்தின் பொது குலகுருக்களை அழைத்து மரியாதை
செய்து, அவர்கள் முன்னிலையில் கும்பாபிசேக
நிகழ்வை நடத்துவதன் மூலம் தெய்வ சாநித்தியம் சிறப்பாக இருக்கும். 
12.     காணி தெய்வ வழிபாட்டு முறைகளை ஆகம விதிப்படி குலகுருவே தெளிவாக எடுத்துக்கூற
வல்லவர். (தற்போது நடைமுறையிலுள்ள கேரள
பணிக்கர்களின் பிரச்ன முறை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்)
13.     காணி தெய்வ கும்பாபிசேகங்களை சிவாச்சாரியார்கள் மட்டுமே முன்னின்று நடத்த
தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.
14.     பண்டார சன்யாசி மடத்தாரைகொண்டு நடத்தப்படும் கும்பாபிசேக கூத்துகள் தவிர்க்கப்பட வேண்டும். துறவிகள் பாதை வேறு; சம்சாரிகளுக்கான காணி தெய்வ ஆலய வழிமுறை வேறு.  இதில் குழப்பம்
கொள்ளக் கூட.  அவர்கள் வழிமுறைகளுக்கும்
கும்பாபிசேகத்திற்கும் சம்பந்தம் இல்லை.
21 ஆம் நூற்றாண்டில் மீட்டுருவாக்கம் 
     இன்றைய கொங்கு
துளுவ பிள்ளைகளின் எழுச்சி காரணமாகவும் அதிகபடியான தகவல் தொடர்பு காரணமாகவும்
சிறுபான்மை எண்ணிக்கை சமூகமாக உள்ள நாம் ஒருங்கிணைக்கப்பட்டு புதியதோர்
உத்வேகத்துடன் தன் குலதெய்வங்களையும், தன் கோயில் உரிமைகளையும், தேடி கண்டறிந்து
ஆவணப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருமணங்கள் என்று வருகிறபோது கொங்கு
வெள்ளாளர்  என்ற சான்றிதழ் நமக்கு
பயனளிப்பதில்லை. நமக்கும் அவர்களுக்கும் திருமண முறைகள், பழக்கங்களில் வேறுபாடு
உள்ளதாலும், குலம், காணி என்பனவற்றில் தனி அடையாளங்கள் இருப்பதாலும், குலகுரு
தனியாக இருப்பதாலும், இவ்விரு சமூகங்களுக்குள் கடந்த 400 ஆண்டுகளில் கொளவினை
கொடுப்பினை இல்லாத காரணத்தாலும், நாம் அவர்களின் (சடையப்ப வள்ளல்)
புத்திரவர்க்கமாக தொன்றுதொட்டு அறியப்படுவதாலும் தனியாகவே அறியப்படுகிறோம். ஆகையால்,
நாம் நாம் தனி அடையாளத்தை நிலைநாட்டு பொது பெயரில் இன்றைய இளைஞர்கள் மீட்டுவாக்கம்
ஆகிய வேண்டும் என்று முனைந்து செயல்படுகிறார்கள். அப்போதுதான், திருமணமும்
வாழ்வும் சிறக்கும். 
தனி வகுப்பு சான்றிதழ் பயணம்
     ஈரோடு, கோபி, அவிநாசி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலைபேட்டை,
பழனி, ஒட்டன்சத்திரம், கரூர், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் திருவண்ணாமலை,
பாப்பிரெட்டிபட்டி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் 600 ஊர்களில்  வாழும் முடவாண்டார் சமூகம் (பின்னிணைப்பு 2
பார்க்க) பல்வேறு பெயர்களில் சான்று வாங்கி வருகிறோம். நம்மில் பலர்   புதிய
வகுப்பு சான்று பதிவு செய்ய வேண்டும் (உதாரணமாக பூந்துரை வெள்ளாளர் , கொங்கு துளுவ
பிள்ளை, சிலர் கொங்கு வெள்ளாளர் என்றும் ) தனி பொது பெயர் இருக்க வேண்டும் என்று
பல கருத்துக்களை பரிசீலித்து வருகின்றனர். எனினும், இந்த நூலில் முதலிலிருந்து
ஆராயப்பட்டதில்  வெள்ளாளராகிய சடையப்ப
வள்ளல் அவர்கள் பரம்பரையில்  தோன்றி துளுவ
நாயக்கர்களால் வளர்க்கப்பட்ட பின் புத்திரவர்க்கமாய் 400 வருடங்களாக தனியாக
இயங்கும் குடியை கொங்கு துளுவ பிள்ளை என வகுப்பு பெயர் பெறுவதே பல நடைமுறை
சிக்கல்களை உருவாக்காமல் நம் வரலாற்று 
அடையாளத்திற்கு பொருத்தமானதாகவும் இருக்கும் என அறியப்படுகிறது.  எனவே, “கொங்கு துளுவ பிள்ளை” என்ற பொது
அடையாளத்தை பெற்று நாம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் நம்மை இணைக்க
அரசிடம் ஆவண செய்ய வேண்டியிருக்கிறது. நாம் ஒன்றிணைந்து இதனை நடமுறைக்கு கொண்டு
வருவோம்.  
பின்னிணைப்பு – 1 
நம் வரலாற்று பட்டயம் 
 காலம் 16 ஆம் நூற்றாண்டு ;                      இடம்: சத்தியமங்கலம்,
பூந்துறை 
ஹரி ஓம் நன்றாக
குருவாழ்க குருவே துணை
காப்பு
பூந்துறை நாட்டு
அம்மைமேல் பாடல்
மார்வேவு பூந்தரசர் வாழுநாடு சத்திமங்கை வருகோதண்டால் 
பூமேவு காராளர் கிளைவாழ்க பெருமைசேர்ப்பார் பருவநாட்டில் 
பாரமேவு ஞானஉமை ஈஸ்பரர்மேல் செந்தமிழைப் பரிந்துபாடக் 
கார்மேவு தடவிகட மதமொழுகும்  கரிமுகனும் காப்பதாமே 
பூமண்ட லத்தில் புகழது விளங்க 
மாமண்டலீகர் வந்தடி பணிய  
ஆறிரு கரமும் ஆறிரு புயமும் 
ஆறிரு விழியும் ஆறிரு பதமும் 
சண்முகம் ஆறும் சாற்றிய நீறும் 
வண்மையால் வேலும் வளர்தண்டைக் காலும் 
சரவண முருகன் சங்கரி குமரன் 
அரிதனில் துயிலும் அச்சுதன் மருகன் 
அன்புடன் வள்ளி தெவியானையை மணந்தோன்  
தென்புட னிருக்கும் சென்னியங் கிரிசூழ்
பூந்துறை  தன்னில்ப் புட்பவ நேசன் 
பாந்தக மான பாகம் பிரியாள் 
காரணி கரிய காழிநா யகியும் 
தாரணி புகழும் தாமோ திரரும் 
அத்தனூ ராயி அங்காள தேவி 
கர்த்தனாய் விளங்கும் காசி லிங்கரும் 
யாவருந் தேவர் அனுதினங் காக்க 
காவல னான காடை குலேசன் 
தாரணி மதிக்குந் தண்டிகைத் துரையாம் 
வாரண வாசி மகபதி வாழும் 
பூந்துறை சேந்த புகழ்முட வாணர் 
வாழ்நதிடுஞ் சத்தி மங்கையில் மேவும் 
கங்கையும் பிறையுங் கடுக்கை யணிந்த 
சங்கரி விமலன் சத்தியீசு பரராம் 
இன்பமே
யுதவும் ஈசுபரி தேவி 
அம்பிகை
புகழ்தயில் அம்மைநா யகியும் 
நேயமா யுலகை ஒபாயமா
யளந்த
மாயவர்
வரதர் தாயர்தன் னுடனே 
பார்பதி
பூதப் படைகள்தன் சேனை 
சீர்பெறப்
படைத்த செல்லாண்டி யம்மன் 
ஆழிசூழ்
புவியில் அத்தனூ ராயி 
சோழநூ றம்மன்
துரையண்ண மாரும் 
வேட்டைக்கா
ரர்களும் மிகசோழ செட்டி 
யாட்டிமை
புரியும் அங்கா ளம்மன் 
அந்தரி மாரி அழகு நாயகி 
செந்தமிழ் பெருகு மேச்சேரி யம்மாள் 
பாக்கிய முதவும் படைவெட்டி யாயி 
வாக்காது பிசகா மாமுனி யண்ணன் 
சத்தகன் னியரும் தாய்பக வதியும்
மெத்தவே வரங்கள் வேணது கொடுக்க 
யாவருந் தேவர் மனமது மகிழ்ந்து 
தினசரி காக்கச் செயமது படைத்தோர் 
தரணியில் கலியுக சக்காரந் தன்னில் 
அருமை மூவா யிரத்தியெண் ணூத்தித்
தொண்ணூத் தாரும் துலங்கிய வரையில் 
நன்றாய்த் தருமம் நடத்திய நாளில் 
வாளி  யானந்த வருசம் ஆளிசூழ் 
மாசமு அதிகாத் திகையில் யிதுவுமே
தேதி யிருபத் தாண்டில் உதவும் 
உத்திரட் டாதி உயர்வெள்ளி  நாளில் 
அசுபதி திசுபதி செயபதி கசபதி 
நரபதி யான செங்கோல் நடத்தும் 
அந்தநா ளையிலே ஆவுவொரு பொதிபால் 
விந்தையா யளக்கும் விதமுள்ள தவசம் 
காசொன்று குடுத்தால் கலமது அளக்கும் 
நேசமாப் பணத்துக்கு நெலலுப் பதிங்கலம் 
அடவுடன் செம்பொன் அள்ளியே பிச்சை 
இடுவ தல்லாமல் யேற்பவ ரில்லை 
மாதமூன்று மாரி போதவும் பொழிந்து 
நீதியாய் நடக்கும் ஆதிநா ளையிலே 
எண்ணரி தானம் ஈந்த காராளன் 
வெண்ண நல்லூர் சடையன் மனைதனில் 
மன்மத வடிவாய் மதியினில் ஒளிவாய் 
முன்ன வெழுத்தால் முடவனைப் பெற்றாள் 
ஆன்றதோர் சேதி அடவுட னறிந்து
என்னமோ பாவம் எழுவதி யாமல் 
வந்ததோர் அந்த மதலை யதனை 
அந்தமா யொருத்தர் அறிந்தறி யாமல்  
பொங்கமாய்த் தங்க போழையில் வைத்து 
கங்கைபோல் பெருகும் காவேரி யாத்தில் 
விட்டமாத் திரத்தில் மிதந்துதான் போழை
சட்டமாய் வருது தனித்தொரு வர்க்கும்
அமடு படாமல் ஆற்றினி லேதான் 
குமிடுகள் தாண்டி கொலுவாய் கடந்து 
நாடு கடந்து நடுக்கான கத்தில்க் 
கூடு துறையில் குலாவியே வரையில் 
கருணைசேர் மல்லிக் காச்சுந ராயரும் 
அருணனை நேரும் அதிவீர ராயர் 
மனுநீதி பிரவுடைய மகாதேவ ராயர் 
அனுதரை வெல்லும் அச்சுத ராயர் 
கோவிந்த ராயர் கொங்கண ராயர் 
கோபால ராயர் தேசமே யாளும் 
தேசமே யாளும் சரோத்தி ராயர் 
மாசில்லாப் புகழ்சேர் மகுடவர்த் தனரும் 
ராச்சியத் துள்ள நற்குடி படையும் 
உத்துரை ராய ருடன்துரை மக்கள் 
சேருவை காரர் சேனை யோர்களும் 
பாரினி லுள்ள படைத்தலை வீரர் 
பேரணி முழங்கப் பெரிய ரதந்தனில் 
ராயர் தான்கொலு விருக்க 
மன்னியர் வணங்கி மணிமுடி பணிந்து 
சொன்னது வயணஞ் சுவாமிதே வேந்திரர் 
மின்னுகா வேரி வெள்ளமே பார்க்க 
அப்பனை செய்யும் அய்யனே இன்னமே 
இப்புடன் ராயர் மிகமன மகிழ்ந்து 
சதுரங்க சேனை தளமது சூழ 
விதமுட னெழுந்து வேடிக்கை பார்க்க 
துளுவநா யக்கர் துரைமக் களுமாய் 
அளவிலாச் சேனை அதிகயோ பழியார் 
பெரியகா வேரி பெருகி வெள்ளம் 
வருவது பார்க்க மன்னர் மன்னிப்பாக 
அலையுட னலையாய் அதுதங்கப் போளை 
துலையினில் வார பெருமுத லெல்லாம் 
வாளியா யுங்கள் வசமெனச் சொன்னார் 
சொன்னமாத் திரத்தில் துளுவ நாயக்கரும்  
உன்னித மாக ஒருசினந் தன்னில் 
இருகரை யதுவும் ஒருகரை யாகப் 
பெருகியே வெள்ளம் வருகிற ஆத்தில் 
காகமாய்ப் பறந்து கயினீச்சம் தன்னில் 
பாகமாய்ப் போளைப் பக்கமே சென்று 
தாவிப் பிடித்துத் தணாக்கரை யேற்றி 
மேனியே போழை விதமுடன் அவிழ்த்துப் 
பார்க்கும் பொழுதில் பகவா னொளிவுபோல் 
ஏற்கவே குழந்தை இருகால் முடமாய் 
இருந்தது கண்டு இனியதோர் ராயர் 
பொருந்திய தங்கள் புண்ணிய மென்று 
பரிவுடன் முடப் பயலையு மெடுத்துப் 
பிரியமாய்க் கொடுத்துப் பின்னமே ராயர் 
வேண்டிய வரிசை விளங்கவே தருவோம் 
ஆண்டுகொண் டிடுவீர் அன்னம்போல் வளர்த்து 
யென்றுதான் ராயர் இம்மொழி யுரைக்க 
நன்றெனத் துழுவ நாயக்கர் வளர்த்தார் 
அப்படி யிருக்கும் அந்நாளி லேதான் 
செப்பமாய் ராயர் சிந்தை மகிழ்ந்து 
தன்னுட ஆக்கினைச் சக்கரமே நடத்தி  
மின்னிலிருங் காராளர் 
நாலாறு நாட்டில் நற்குடி படையை 
வாலாய மாக வரவழைத் துடனே  
பருவமுஞ் சொல்லி பாரினி  லுங்கள் 
அருமைசேர் குழந்தை அதுகால் முடமாய் 
ஆற்றினில் வந்து அதுதனை யெடுத்து 
சொந்தமாய் வளர்க்க சொன்னசொல் படியே 
நன்றெனத் துளுவ நாயக்கர் வளர்த்தார் 
அவர்க்கின்று தன்வரிசை யெல்லாம் வரிக்கல்லுக் 
காவேரி காசியும் பூமியாகாசம் அரிய 
சந்திர சூரியர்க ளளுள்ள வரைக்கும் 
இந்திர தேவர்கள் யெல்லா மறிய 
உற்றொரு கொடிக்கொரு உம்ப ழத்தம்
வெற்றிசேர் கின்றமிக செம்பத் துளுவும் 
மன்ன வர்புகழ் அழுந்த தேவார 
புன்னைமேட்டு டன்புகழ் சோழ னூரும்   
ஆண்டா வந்தி அதுகோட் டூரும் 
தண்டிகைப் பரிக்குள சத்திமங் கையுடன் 
ஏழு கிராமம் எண்ணாயிரம்பொன்னுச் 
சீமையென்று கல்லுவெட்டு சூழவேபோட்டு 
மேதினி யரிய ஆகாசம் பூமி 
அதுவுள்ள மகிழ 
வாகான சுங்கம் மணவரி யில்லே 
எருமைவரி யில்லே 
நல்மாடு நச்சேரை யில்லே வெட்டி 
பொட்டணமும் இல்லை பேயிற மழைக்கி 
யெறைக்கிற வெய்யிலுக்கு பயந்து பிழைக்கவும் 
ஏறாறு மயேசுபரர் யேழுல கரிய 
ஈன்றகா ராளர் வண்மை சேருகின்ற 
பட்டிக்கு  ஒருபணம் நகரம் 
வண்மையாய் இருந்து வாழும் வீட்டுக்குச் 
சத்தியாய்த் தவசம் எட்டு வள்ளம் 
வர்த்தனை என்று வாச்சாத முகமும் 
தந்துதான் ராயர் சமூகந் தனிலே 
விந்தையாய் நாலு வெகுமதி யுதவி 
பாங்குடன் உண்டு பண்ணும் வர்த்தனையே 
இது நாங்களே யென்று நடத்தின பேர்கள் 
ஒன்று லட்சமாய் உலகுள்ள மட்டும் 
சென்றிட மெல்லாஞ் சிறப்புட னிருப்பான் 
இதை ஆதா மொருவன் அடுகள நினைத்தால் 
மாதா பிதாவை வதைத்திட்ட பாவம் 
பெறுவான் கவுசுடன் 
கங்கைக் கரையினில்க் காராம் பசுவைக் 
கழுத்தை அறுத்திட்ட பாவம் பெறுவான் 
பெத்த பிள்ளையைப் பெண்டு பிடிச்ச 
தோசத்திலே போகக் கடவனே 
என்றுதான் ராயர் அனைவரும் மதித்து 
நாடது கூடி நடத்தும் வர்த்தனையே 
யூரேல்லாந் தேடி உடனவர வழைத்து 
முந்தின பிள்ளைக்கு முதலிவ னென்று 
சொந்தமாய்க் கொதிபாலச் சோறது போட்டு 
ஆதரித் திட்டோர் அவங்கள கோத்திரமும் 
பூதல மீதில் புகழது விளங்கி 
ஆடு மாடு எருமை முத்தவசமும் 
தேடியே படைத்துச் செல்வமும் மேலும் 
சவுபாக் கியமும் 
புவிமேல் படைத்துப் புண்ணிய முண்டாம் 
மார்க்கண் டனைப்போல் வயதுதான் வாழ்ந்து 
ஏற்க்னவே இருப்பார் இந்திரன் போல 
நற்குடி நாற்பத் தெண்ணாயிரம் 
பசுங்குடி பன்னீ ராயிரம் 
சக்கிரை விளங்கித் தான்நிலை நாட்டி 
வாய்ததிடுஞ் சதமங்கை மயேசுபரர் அறிய 
யெத்திசை மதிக்கும் இவர்முட வாண்டார் 
காரண குருவே காசினியில் விளங்கும் 
பூரண கிருபை புரிந்தடி யார்க்கு 
மந்திரம் ஞானம் மகிந்துப தேசம் 
தந்துலச் சற்க்குரு மூர்த்தி 
செழுந்திரு விளக்கத் தேவியர்ச் சனைசெய 
குழந்தையா னந்தர் குருபாதம் பணிவோம்  
பின்னிணைப்பு 2 –
ஆதியானந்த குருவிடம் உள்ள நம்முடைய ஊர்த்தொகை (1930 க்கு முன்) 
(நம் சமூக கீழ்கண்ட ஊரில் வசித்து
வந்துள்ளனர், வசித்தும் வருகின்றனர். நாம் சமூக மக்கள் தரகர்களை தவிர்த்து
இவ்வூர்களில் விசாரித்து தெரிந்துகொண்டு திருமண உறவுகள் வைத்துக்கொள்ளவும்) 
| 
   வ. எண் .  | 
  
   ஊர்கள்  | 
  
   மாவட்டம்  | 
  
   தாலுக்கா  | 
 
| 
   1  | 
  
   புத்தூர் புதுப்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   ஈரோடு   | 
 
| 
   2  | 
  
   வீராண்டிபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   3  | 
  
   சாணார்பாளையம் வாய்ப்பாடி  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   4  | 
  
   பெரியாண்டிபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   5  | 
  
   தொட்டம்பட்டி  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   6  | 
  
   சின்னாண்டிபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   7  | 
  
   கரட்டுப்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   8  | 
  
   அக்கரையாம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   9  | 
  
   சிறுகழஞ்சி ஆலாம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   10  | 
  
   குப்பாண்டிபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   11  | 
  
   பாப்பம்பட்டி  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   12  | 
  
   சுப்பனூர்  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   13  | 
  
   கத்தாங்காணி ரெட்டிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   14  | 
  
   மானூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   15  | 
  
   நாச்சிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   16  | 
  
   காளியம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   17  | 
  
   வெள்ளிமலை  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   18  | 
  
   புளியண்டாம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   19  | 
  
   வண்ணாத்துறை புதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   20  | 
  
   கவுண்டன் புதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   21  | 
  
   சங்கராண்டிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   22  | 
  
   பொறையகவுண்டன் புதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   23  | 
  
   புதுப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   24  | 
  
   பொள்ளக்காளிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   25  | 
  
   நல்லகாளிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   26  | 
  
   குப்பிச்சிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   27  | 
  
   தோங்குட்டி ஆண்டிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   28  | 
  
   கு.முடவாண்டிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   29  | 
  
   காரப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   30  | 
  
   திருமலைநாயக்கன்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   31  | 
  
   துத்தாரிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   பல்லடம்   | 
 
| 
   32  | 
  
   எளவந்தி  | 
  
   திருப்பூர்   | 
  
   பல்லடம்   | 
 
| 
   33  | 
  
   வடுவபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   பல்லடம்   | 
 
| 
   34  | 
  
   ஈஸ்வரிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   பல்லடம்   | 
 
| 
   35  | 
  
   வாய்ப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   பல்லடம்   | 
 
| 
   36  | 
  
   வேலப்பகவுண்டன்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   பல்லடம்   | 
 
| 
   37  | 
  
   ராமாயணம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   பல்லடம்   | 
 
| 
   38  | 
  
   கரப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   39  | 
  
   கத்தாங்காணி   | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   40  | 
  
   கொடுவாய் பள்ளிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   பொங்கலூர்  | 
 
| 
   41  | 
  
   அய்யம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   பொங்கலூர்  | 
 
| 
   42  | 
  
   எல்லப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   பொங்கலூர்  | 
 
| 
   43  | 
  
   வஞ்சிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   பொங்கலூர்  | 
 
| 
   44  | 
  
   இடையங்கிணறு  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   45  | 
  
   நவக்கொம்பு  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   46  | 
  
   செட்டிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   47  | 
  
   சங்கப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   48  | 
  
   சூரியநல்லூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   49  | 
  
   காதபுள்ளபட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   50  | 
  
   சவுனிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   51  | 
  
   சின்னியம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   52  | 
  
   கோப்பண்ணம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   53  | 
  
   வெங்கக்கல்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   54  | 
  
   வெள்ளியம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   55  | 
  
   கொளிஞ்சிக்காட்டுபுதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   56  | 
  
   வண்ணாப்பட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   57  | 
  
   பனமரத்துப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   58  | 
  
   கல்லிவலசு  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   59  | 
  
   ஆளவந்தாம்வலசு  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   60  | 
  
   மோளார்பட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   61  | 
  
   பொன்னாலிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   62  | 
  
   சாமியார்புதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   63  | 
  
   கோவிந்தபுரம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   64  | 
  
   கொமாரபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   65  | 
  
   வேடப்பட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   66  | 
  
   கருப்புசாமி புதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   67  | 
  
   பாப்பாகுளம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   68  | 
  
   சாமராப்பட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   69  | 
  
   காட்டு சின்னதாராபுரம் (பார்த்தசாரதிபுரம்)  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   70  | 
  
   ருத்ராபாளையம்   | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   71  | 
  
   குப்பம்பாளையம்   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   72  | 
  
   அய்யம்பாளையம்   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   73  | 
  
   காவலப்பட்டி வேளாயிரம்பாளையம்   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   74  | 
  
   தாழையம்   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   75  | 
  
   மூவலூர் முத்துநாயக்கன்பட்டி   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   76  | 
  
   கண்டியகவுண்டன் புதூர்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   77  | 
  
   கொழுமங்கொண்டான்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   78  | 
  
   அப்பியம்பட்டி   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   79  | 
  
   மேகரைப்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   80  | 
  
   ஆடிநாயக்கன்வலசு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   81  | 
  
   உண்டராபட்டி   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   82  | 
  
   மணக்கடவு சின்னவேலம்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   83  | 
  
   சம்புவவலசு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   84  | 
  
   மொட்டுநூத்து   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   85  | 
  
   கோயல் அம்மாபட்டி   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   86  | 
  
   வாகரை   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   87  | 
  
   மருச்சிலம்பு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   88  | 
  
   ஆலாம்வலசு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   89  | 
  
   தும்பலப்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   90  | 
  
   பாறைபட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   91  | 
  
   பூலாம்பட்டி   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   92  | 
  
   புளியம்பட்டி   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   93  | 
  
   மொள்ளம்பட்டி   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   94  | 
  
   பள்ளிகொடத்தான்வலசு   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   95  | 
  
   கலிக்கநாயக்கன்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   96  | 
  
   கோதைமங்கலம்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   97  | 
  
   வத்தகவுண்டன்வலசு   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   98  | 
  
   அமரம்பூண்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   99  | 
  
   ருக்காருபட்டி   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   100  | 
  
   கணக்கம்பாளையம்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   101  | 
  
   எரவநாயக்கன்பட்டி   | 
  
   திண்டுக்கல்   | 
  
   பழனி   | 
 
| 
   102  | 
  
   மஞ்சநாயக்கன்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   103  | 
  
   தேவத்தூர்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   104  | 
  
   போடாரப்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   105  | 
  
   மண்டூறாம்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   106  | 
  
   கப்பல்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   107  | 
  
   அம்பிளிக்கை   | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   108  | 
  
   குசவபட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   109  | 
  
   அரசபுள்ளபட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   110  | 
  
   வீரல்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   111  | 
  
   தும்பச்சம்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   112  | 
  
   முத்தநாயக்கன்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   113  | 
  
   சீரங்கவுண்டன் புதூர்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   114  | 
  
   மூனூர்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   115  | 
  
   ஜவ்வாதுப்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   116  | 
  
   அத்தப்பம்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   117  | 
  
   வெங்கிட்டாபுரம்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   118  | 
  
   ஓடப்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   119  | 
  
   குத்திலுப்பை  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   120  | 
  
   கொண்டராங்கி வாடிப்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   121  | 
  
   ரை வாடிப்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   122  | 
  
   இடையாம்வலசு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   123  | 
  
   நீலங்காளிவலசு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   124  | 
  
   தில்லைக்கவுண்டன் புதூர்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   125  | 
  
   கெருடங்கோட்டை  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   126  | 
  
   ரங்கசாமி கவுண்டன் புதூர்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   127  | 
  
   சிலுக்கநாயக்கன்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   128  | 
  
   துலுக்கம்வலசு பட்டுத்துறை வளையக்காரவல்சு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   129  | 
  
   குரணக்கல்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   130  | 
  
   எல்லம்பாளையம் வெங்கக்கல்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   131  | 
  
   கரியாம்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   132  | 
  
   தும்பிச்சிபாளையம்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   133  | 
  
   பொல்லுர்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   134  | 
  
   குப்பாயிவலசு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   135  | 
  
   திருமாகவுண்டன்வலசு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   136  | 
  
   வீரப்பகவுண்டன்வலசு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   137  | 
  
   அப்பயம்பட்டி  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   138  | 
  
   எல்லிமாவலசு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   139  | 
  
   நல்லாம்பாளையம்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   140  | 
  
   புளியம்வலசு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   141  | 
  
   குள்ளக்கல்லிவலசு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   142  | 
  
   துச்சாண்டம்வலசு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   143  | 
  
   கருமன்கிணறு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   144  | 
  
   சேசையம்வலசு  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   145  | 
  
   ரை.புத்தூர்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   146  | 
  
   சுள்ளப்பொரிக்கிபாளையம்  | 
  
   திண்டுக்கல்   | 
  
   ஒட்டன்சத்திரம்   | 
 
| 
   147  | 
  
   மூலனூர் சாணார்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   148  | 
  
   குமரையம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   149  | 
  
   பழனிகவுண்டன்வலசு  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   150  | 
  
   எல்லப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   151  | 
  
   நயினாகவுண்டன்வலசு  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   152  | 
  
   பாப்பாவலசு  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   153  | 
  
   இலுப்பைக்கிணறு  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   154  | 
  
   ராயம்வலசு  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   155  | 
  
   வேட்டுவபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   156  | 
  
   சேனாபதிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   157  | 
  
   ஆயிக்கவுண்டன்பாளையம்  | 
  
   கரூர்   | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   158  | 
  
   கோட்டாறுபட்டி  | 
  
   கரூர்   | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   159  | 
  
   எரசப்பாடி  | 
  
   கரூர்   | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   160  | 
  
   நெச்சுகாளிபாளையம்  | 
  
   கரூர்   | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   161  | 
  
   காமக்காபட்டி  | 
  
   கரூர்   | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   162  | 
  
   அரவக்குறிச்சி  | 
  
   கரூர்   | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   163  | 
  
   ரங்கமலை கோட்டூர் ராசகவுண்டன்வலசு  | 
  
   கரூர்   | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   164  | 
  
   குரம்பட்டி  | 
  
   கரூர்    | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   165  | 
  
   தும்பளப்பட்டி  | 
  
   கரூர்    | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   166  | 
  
   தாடாகோயில்  | 
  
   கரூர்    | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   167  | 
  
   வெள்ளியம்பாளையம்  | 
  
   கரூர்    | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   168  | 
  
   ஊத்துக்கரைப்பாளையம்  | 
  
   கரூர்    | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   169  | 
  
   ஊத்துப்பட்டி  | 
  
   கரூர்    | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   170  | 
  
   கைலாசுபுரம்  | 
  
   கரூர்    | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   171  | 
  
   மண்ணுகட்டிபாளையம்  | 
  
   கரூர்    | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   172  | 
  
   புள்ளக்கவுண்டம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   173  | 
  
   கோடந்தூர்  | 
  
   கரூர்    | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   174  | 
  
   வெள்ளியம்பாளையம்  | 
  
   கரூர்    | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   175  | 
  
   குருக்கலுப்பட்டி  | 
  
   கரூர்    | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   176  | 
  
   செம்மாண்டம்பாளையம்  | 
  
   கரூர்    | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   177  | 
  
   காரப்பபாளையம்  | 
  
   கரூர்    | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   178  | 
  
   காளிபாளையம்  | 
  
   கரூர்    | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   179  | 
  
   பரமத்தி  | 
  
   கரூர்   | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   180  | 
  
   காளிபாளையம்  | 
  
   கரூர்   | 
  
   அரவக்குறிச்சி  | 
 
| 
   181  | 
  
   கோணம்பட்டி  | 
  
   கரூர்   | 
  
   கரூர்   | 
 
| 
   182  | 
  
   எருக்கங்காட்டுபுதூர்  | 
  
   கரூர்   | 
  
   கரூர்   | 
 
| 
   183  | 
  
   தும்பிவாடி  | 
  
   கரூர்   | 
  
   கரூர்   | 
 
| 
   184  | 
  
   குளத்துப்பாளையம்  | 
  
   கரூர்   | 
  
   கரூர்   | 
 
| 
   185  | 
  
   சுக்காலியூர்  | 
  
   கரூர்   | 
  
   கரூர்   | 
 
| 
   186  | 
  
   புதூர்  | 
  
   கரூர்   | 
  
   கரூர்   | 
 
| 
   187  | 
  
   ரட்டியபாளையம்  | 
  
   கரூர்   | 
  
   கரூர்   | 
 
| 
   188  | 
  
   சணப்பிரட்டி  | 
  
   கரூர்   | 
  
   கரூர்   | 
 
| 
   189  | 
  
   சின்னவெள்ளாளபட்டி  | 
  
   கரூர்   | 
  
   கரூர்   | 
 
| 
   190  | 
  
   பெரியவெள்ளாளபட்டி  | 
  
   கரூர்   | 
  
   கரூர்   | 
 
| 
   191  | 
  
   மூலக்காட்டான்னூர்  | 
  
   கரூர்   | 
  
   மண்மங்கலம்  | 
 
| 
   192  | 
  
   குப்பிச்சிபாளையம்  | 
  
   கரூர்   | 
  
   மண்மங்கலம்  | 
 
| 
   193  | 
  
   முன்னம்பாளி  | 
  
   கரூர்   | 
  
   மண்மங்கலம்  | 
 
| 
   194  | 
  
   துண்டுபெருமாபாளையம்  | 
  
   கரூர்   | 
  
   மண்மங்கலம்  | 
 
| 
   195  | 
  
   மூலிமங்கலம்  | 
  
   கரூர்   | 
  
   மண்மங்கலம்  | 
 
| 
   196  | 
  
   உறத்தை  | 
  
   கரூர்   | 
  
   மண்மங்கலம்  | 
 
| 
   197  | 
  
   செங்கல்பாளையம்  | 
  
   கரூர்   | 
  
   மண்மங்கலம்  | 
 
| 
   198  | 
  
   ஆலாம்பாளையம்  | 
  
   கரூர்   | 
  
   மண்மங்கலம்  | 
 
| 
   199  | 
  
   செல்லரப்பாளையம்  | 
  
   கரூர்   | 
  
   மண்மங்கலம்  | 
 
| 
   200  | 
  
   ஆறுநாட்டார்மலை காரப்பாளையம்  | 
  
   கரூர்   | 
  
   மண்மங்கலம்  | 
 
| 
   201  | 
  
   மொளவாயம் புதுப்பாளையம்  | 
  
   கரூர்   | 
  
   மண்மங்கலம்  | 
 
| 
   202  | 
  
   சிலுவம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கொடுமுடி   | 
 
| 
   203  | 
  
   காகம்  | 
  
   ஈரோடு   | 
  
   மொடக்குறிச்சி   | 
 
| 
   204  | 
  
   வாழைத்தோட்டம்  | 
  
   ஈரோடு   | 
  
   கொடுமுடி   | 
 
| 
   205  | 
  
   காரவலசு  | 
  
   ஈரோடு   | 
  
   கொடுமுடி   | 
 
| 
   206  | 
  
   கணுவாயம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கொடுமுடி   | 
 
| 
   207  | 
  
   எல்லாக்காட்டுவலசு  | 
  
   ஈரோடு   | 
  
   கொடுமுடி   | 
 
| 
   208  | 
  
   கந்தசாமி பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கொடுமுடி   | 
 
| 
   209  | 
  
   களதமடைப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   210  | 
  
   ஊடையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   211  | 
  
   பொன்னபுரம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   212  | 
  
   காரைக்காட்டுவலசு  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   213  | 
  
   புதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   214  | 
  
   வேளாயிரம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   215  | 
  
   பூண்டியம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   216  | 
  
   பசுபதிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   217  | 
  
   நடுப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   218  | 
  
   வெள்ளகோயில் சொரியகிணத்துப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   219  | 
  
   அரியாண்டிவலசு  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   220  | 
  
   செவ்வாழிபுரம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   221  | 
  
   மீனாட்சிவலசு  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   222  | 
  
   கம்பிளியம்பட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   223  | 
  
   சின்னம்மன் கோயில்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   224  | 
  
   ஆலாம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   225  | 
  
   துலுக்கம்வலசு கம்மலபாளையம் ராசபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   226  | 
  
   தீத்தம்வலசு கருங்கல்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   227  | 
  
   புங்கத்துறை புதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   228  | 
  
   தொட்டிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   229  | 
  
   வெள்ளியம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   230  | 
  
   குள்ளகாளிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   231  | 
  
   மேட்டுவலசு  | 
  
   திருப்பூர்   | 
  
   தாராபுரம்   | 
 
| 
   232  | 
  
   அர்த்தநாரிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   233  | 
  
   சேடங்காலிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   234  | 
  
   ரை-காளியப்பகவுண்டன்புதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   235  | 
  
   ராசம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   236  | 
  
   கவுண்டன்புதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   237  | 
  
   இல்லியம்புதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   238  | 
  
   ராமபட்டணம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   239  | 
  
   எருக்கலங்காட்டு புதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   240  | 
  
   படியூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   241  | 
  
   குருக்கத்தி  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   242  | 
  
   ஆவங்காளிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   243  | 
  
   ராமலிங்கபுரம்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   244  | 
  
   மொட்டரப்பாளையம் செங்காளியப்பகவுண்டன் புதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   245  | 
  
   ஆலாம்பாடி  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   246  | 
  
   சிக்காம்பாளையம் வாரப்பா  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   247  | 
  
   அலவண்டம்வலசு  | 
  
   திருப்பூர்   | 
  
   காங்கேயம்   | 
 
| 
   248  | 
  
   கள்ளகவுண்டம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   மொடக்குறிச்சி   | 
 
| 
   249  | 
  
   கொங்கம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   250  | 
  
   காட்டில் சாலைப்புதூர்  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   251  | 
  
   கோடாம்புலி  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   252  | 
  
   வீரணம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   253  | 
  
   கரண்டிபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   254  | 
  
   எல்லாம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   255  | 
  
   செம்மாண்டம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பெருந்துறை   | 
 
| 
   256  | 
  
   மயிலம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   ஊத்துக்குளி   | 
 
| 
   257  | 
  
   செரங்காடு  | 
  
   திருப்பூர்   | 
  
   ஊத்துக்குளி   | 
 
| 
   258  | 
  
   வட்டாளாவு  | 
  
   திருப்பூர்   | 
  
   ஊத்துக்குளி   | 
 
| 
   259  | 
  
   சொக்கனூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   260  | 
  
   தைலம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   261  | 
  
   வேலூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   262  | 
  
   ஊஞ்சப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   263  | 
  
   ஆயிக்கவுண்டன்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   264  | 
  
   நல்லிகவுண்டன்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   265  | 
  
   முடவாண்டார்சாலை  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   266  | 
  
   அவிநாசி  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   267  | 
  
   மொண்டிநாதம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   268  | 
  
   கந்தம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   269  | 
  
   வாத்தியார்புதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   270  | 
  
   மூணுகட்டிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   271  | 
  
   பனப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   272  | 
  
   வெங்கக்கல்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   273  | 
  
   எலச்சிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   274  | 
  
   அரசப்பம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   275  | 
  
   சுட்டக்காம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   276  | 
  
   நம்பியம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   277  | 
  
   காளிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   278  | 
  
   கானூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   279  | 
  
   முறியாண்டிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   280  | 
  
   முதலிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   281  | 
  
   நடுப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   282  | 
  
   புலிப்பாறு  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   283  | 
  
   மேட்டுப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   284  | 
  
   முடவாண்டிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   285  | 
  
   கோரமடை  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   286  | 
  
   ஊஞ்சப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   287  | 
  
   பூசாரிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   288  | 
  
   செலம்பகவுண்டம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   289  | 
  
   தச்சபெருமாம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   அவினாசி   | 
 
| 
   290  | 
  
   திருமாண்டம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   சத்தியமங்கலம்  | 
 
| 
   291  | 
  
   புளியம்பட்டி  | 
  
   ஈரோடு   | 
  
   சத்தியமங்கலம்  | 
 
| 
   292  | 
  
   புதூர்  | 
  
   ஈரோடு   | 
  
   சத்தியமங்கலம்  | 
 
| 
   293  | 
  
   செல்லப்பம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   சத்தியமங்கலம்  | 
 
| 
   294  | 
  
   சாலையூர்  | 
  
   ஈரோடு   | 
  
   சத்தியமங்கலம்  | 
 
| 
   295  | 
  
   வடுவம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   சத்தியமங்கலம்  | 
 
| 
   296  | 
  
   ஒத்தக்கடை  | 
  
   ஈரோடு   | 
  
   சத்தியமங்கலம்  | 
 
| 
   297  | 
  
   நீலகிரி மேட்டுப்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   298  | 
  
   போடுத்தம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   299  | 
  
   கீரணம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   300  | 
  
   உடையாம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   301  | 
  
   மணியாரம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   302  | 
  
   நஞ்சகவுண்டன்புதூர்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   303  | 
  
   கோவை மாதம்பட்டி  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   304  | 
  
   தென்னமனூர்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   305  | 
  
   கொண்டயம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   306  | 
  
   மங்கலப்பட்டி  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   307  | 
  
   பூலுவப்பட்டி  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   308  | 
  
   காளம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   309  | 
  
   கந்தகவுண்டன் சாவடி  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   310  | 
  
   கணபதி  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   311  | 
  
   கள்ளிப்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   312  | 
  
   தீத்தாம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   313  | 
  
   கருப்பராயம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   314  | 
  
   பெத்தநாயக்கன்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   315  | 
  
   பச்சம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   316  | 
  
   செரையாம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   317  | 
  
   சின்னியம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   318  | 
  
   சோமனூர் ஊஞ்சப்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   சூலூர்   | 
 
| 
   319  | 
  
   காமாச்சியம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   சூலூர்   | 
 
| 
   320  | 
  
   செங்கத்துரை  | 
  
   கோவை   | 
  
   சூலூர்   | 
 
| 
   321  | 
  
   காடாம்பாடி  | 
  
   கோவை   | 
  
   சூலூர்   | 
 
| 
   322  | 
  
   சூலூர்  | 
  
   கோவை   | 
  
   சூலூர்   | 
 
| 
   323  | 
  
   ராசிபாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   324  | 
  
   எலச்சிபாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   325  | 
  
   வடுவபாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   326  | 
  
   கருமத்தம்பட்டி  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   327  | 
  
   மங்கலம் சின்னாண்டிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   328  | 
  
   குள்ளாகவுண்டம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   329  | 
  
   திருப்பூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   330  | 
  
   பருத்திக்காட்டுபுதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   331  | 
  
   அரண்மனைப்புதூர் கருமம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   332  | 
  
   கவுண்டன்புதூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   333  | 
  
   கருமாண்டாம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   334  | 
  
   சோளியபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   335  | 
  
   முருங்கம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   336  | 
  
   பழுஞ்சிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   337  | 
  
   அவரப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   338  | 
  
   நொச்சிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   339  | 
  
   நாரணாபுரம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   340  | 
  
   மாணிக்காபுரம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   341  | 
  
   வலையபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   திருப்பூர்   | 
 
| 
   342  | 
  
   பணிக்கம்பட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   பல்லடம்   | 
 
| 
   343  | 
  
   ரங்கசமுத்திரம்  | 
  
   திருப்பூர்   | 
  
   பல்லடம்   | 
 
| 
   344  | 
  
   அய்யம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   பல்லடம்   | 
 
| 
   345  | 
  
   செம்மிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   பல்லடம்   | 
 
| 
   346  | 
  
   முத்தாண்டிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   பல்லடம்   | 
 
| 
   347  | 
  
   கரடிவாவி  | 
  
   திருப்பூர்   | 
  
   பல்லடம்   | 
 
| 
   348  | 
  
   செலக்ரைச்சல்   | 
  
   திருப்பூர்   | 
  
   சூலூர்   | 
 
| 
   349  | 
  
   பருவாய்  | 
  
   திருப்பூர்   | 
  
   சூலூர்   | 
 
| 
   350  | 
  
   லட்சுமநாயக்கபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   சூலூர்   | 
 
| 
   351  | 
  
   பாப்பம்பட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   சூலூர்   | 
 
| 
   352  | 
  
   களுங்கல்  | 
  
   திருப்பூர்   | 
  
   சூலூர்   | 
 
| 
   353  | 
  
   ஒறாட்டுக்குப்புசெட்டிபாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   354  | 
  
   மலுமிச்சம்பட்டி  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   355  | 
  
   தம்பாகவுண்டனூர்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   356  | 
  
   நாச்சிபாளையம்  | 
  
   கோவை   | 
  
   கோவை   | 
 
| 
   357  | 
  
   முள்ளுப்பாடி  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   358  | 
  
   அரண்மனைப்புதூர்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   359  | 
  
   நல்லியனகுட்டைப்புதூர்  | 
  
   கோவை   | 
  
   கிணத்துகடவு   | 
 
| 
   360  | 
  
   நல்லிக்கவுண்டனூர்  | 
  
   கோவை   | 
  
   கிணத்துகடவு   | 
 
| 
   361  | 
  
   சென்னியூர்  | 
  
   கோவை   | 
  
   கிணத்துகடவு   | 
 
| 
   362  | 
  
   சூலக்கல் மேட்டுப்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கிணத்துகடவு   | 
 
| 
   363  | 
  
   கோதைவாடி  | 
  
   கோவை   | 
  
   கிணத்துகடவு   | 
 
| 
   364  | 
  
   கொண்டப்பம்பட்டி சித்தூர்  | 
  
   கோவை   | 
  
   கிணத்துகடவு   | 
 
| 
   365  | 
  
   மன்ராயம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   கிணத்துகடவு   | 
 
| 
   366  | 
  
   சேரிபாளையம்  | 
  
   கோவை   | 
  
   கிணத்துகடவு   | 
 
| 
   367  | 
  
   எம்மாண்டபாளையம்  | 
  
   கோவை   | 
  
   கிணத்துகடவு   | 
 
| 
   368  | 
  
   சர்க்காருபாளையம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   369  | 
  
   சாலைப்புதூர்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   370  | 
  
   செட்டிபுதூர்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   371  | 
  
   கப்பளாங்கரை  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   372  | 
  
   கொண்டையாகவுண்டம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   373  | 
  
   கருமாபுரம் புதூர்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   374  | 
  
   செங்குட்டபாளையம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   375  | 
  
   வெள்ளாலபாளையம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   376  | 
  
   காளியாபுரம் கள்ளிபாளையம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   377  | 
  
   ஆலாம்பாளையம்   | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   378  | 
  
   திப்பம்பட்டி  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   379  | 
  
   பெரியாக்கவுண்டனூர்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   380  | 
  
   மாய்கினாம்பட்டி  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   381  | 
  
   சந்திராபுரம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   382  | 
  
   வடக்குகோட்டாம்பட்டி  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   383  | 
  
   தெற்குகொட்டாம்பட்டி  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   384  | 
  
   பொள்ளாச்சி  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   385  | 
  
   வடுவபாளையம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   386  | 
  
   ஊத்துக்குளி  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   387  | 
  
   கருமாபுரம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   388  | 
  
   மாசக்காபாளையம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   389  | 
  
   குரும்பபாளையம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   390  | 
  
   நல்லிகவுண்டன்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   391  | 
  
   வலசு  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   392  | 
  
   சாலத்தூர்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   393  | 
  
   ஆவல்சின்னாம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   394  | 
  
   கருப்பம்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   395  | 
  
   மீன்கரை கணபதிபாளையம்  | 
  
   கோவை   | 
  
   ஆனைமலை   | 
 
| 
   396  | 
  
   வேட்டைக்காரன் புதூர்  | 
  
   கோவை   | 
  
   ஆனைமலை   | 
 
| 
   397  | 
  
   சீரங்காசெட்டியூர்  | 
  
   கோவை   | 
  
   ஆனைமலை   | 
 
| 
   398  | 
  
   சித்தூர்  | 
  
   கோவை   | 
  
   ஆனைமலை   | 
 
| 
   399  | 
  
   அங்கலக்குறிச்சி  | 
  
   கோவை   | 
  
   ஆனைமலை   | 
 
| 
   400  | 
  
   மலையாண்டிபட்டினம்  | 
  
   கோவை   | 
  
   ஆனைமலை   | 
 
| 
   401  | 
  
   அர்த்தநாரிபாளையம்  | 
  
   கோவை   | 
  
   ஆனைமலை   | 
 
| 
   402  | 
  
   ரட்டியாரூரு  | 
  
   கோவை   | 
  
   ஆனைமலை   | 
 
| 
   403  | 
  
   கரட்டூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   404  | 
  
   செல்லப்பம்பாளையம் (தே.புதூர்)  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   405  | 
  
   தேவநல்லூர்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   406  | 
  
   மாமரத்துப்பட்டி   | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   407  | 
  
   லட்சுமாபுரம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   408  | 
  
   கோளாறுபட்டி  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   409  | 
  
   சீலக்காம்பட்டி மலையாண்டிபட்டினம்  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   410  | 
  
   பூசாரிபட்டி  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   411  | 
  
   சுந்தரகவுண்டனூறு  | 
  
   கோவை   | 
  
   பொள்ளாச்சி   | 
 
| 
   412  | 
  
   கொங்கல்நகரம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   413  | 
  
   இலுப்பைநகரம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   414  | 
  
   ராமச்சந்திரபுரம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   415  | 
  
   அம்மாபட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   416  | 
  
   வேளாயிரம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   417  | 
  
   வலசுப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   418  | 
  
   வஞ்சிபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   419  | 
  
   மலைமந்திரிபாளையம்  | 
  
   கோவை   | 
  
   பல்லடம்   | 
 
| 
   420  | 
  
   கருங்குருவிபாளையம்  | 
  
   கோவை   | 
  
   பல்லடம்   | 
 
| 
   421  | 
  
   வடவேடம்பட்டி  | 
  
   கோவை   | 
  
   பல்லடம்   | 
 
| 
   422  | 
  
   ஓடக்கல்பாளையம்  | 
  
   கோவை   | 
  
   பல்லடம்   | 
 
| 
   423  | 
  
   செஞ்சேரி குமாரபாளையம்  | 
  
   கோவை   | 
  
   பல்லடம்   | 
 
| 
   424  | 
  
   முகானூர்  | 
  
   திருப்பூர்   | 
  
      | 
 
| 
   425  | 
  
   பச்சாகவுண்டன்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   426  | 
  
   கம்மாளப்பட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   427  | 
  
   சாமியார்புத்தூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   428  | 
  
   சடையம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   429  | 
  
   வெள்ளம்பட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   430  | 
  
   வெருவேடாம்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   431  | 
  
   ஒட்டப்பாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   432  | 
  
   குமாரபாளையம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   433  | 
  
   ஆத்துகிணத்துப்பட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   434  | 
  
   புக்குளம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   435  | 
  
   உடுமலைப்பேட்டை  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   436  | 
  
   பாலப்பம்பட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   437  | 
  
   காட்டில் குடிகாட்டூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   438  | 
  
   ராசாஊரு  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   439  | 
  
   கண்ணவநாயக்கனூர்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   440  | 
  
   தூங்காயி மலையாண்டிபட்டினம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   441  | 
  
   வெங்கிட்டாபுரம்  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   442  | 
  
   மெட்டுராத்தி  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   443  | 
  
   இச்சிப்பட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   444  | 
  
   பெத்தம்பட்டி  | 
  
   திருப்பூர்   | 
  
   உடுமலை   | 
 
| 
   445  | 
  
   வெள்ளகவுண்டனூர்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   446  | 
  
   கூத்தம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   447  | 
  
   வேட்டுவபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   448  | 
  
   ராயபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   449  | 
  
   ஓசைப்பட்டி  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   450  | 
  
   நல்லாம்பட்டி  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   451  | 
  
   பாப்பாங்காட்டூர்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   452  | 
  
   அய்யம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   453  | 
  
   காட்டூர்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   454  | 
  
   பனங்காட்டூர்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   455  | 
  
   சிட்டாம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   456  | 
  
   பொலவகாளிபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   457  | 
  
   குள்ளம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   458  | 
  
   பொம்மநாயக்கம்பட்டி  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   459  | 
  
   கூகளூர்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   460  | 
  
   நஞ்சகவுண்டம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   461  | 
  
   மேட்டுவலசு  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   462  | 
  
   புதுப்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   463  | 
  
   கோப்பு செட்டிபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   464  | 
  
   அரியப்பம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   465  | 
  
   கெஞ்சனூர் தாண்டாம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   சத்தியமங்கலம்   | 
 
| 
   466  | 
  
   ஒட்டப்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   467  | 
  
   கெம்மநாயக்கம்பட்டி  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   468  | 
  
   தாசம்பட்டி  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   469  | 
  
   துரையம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   470  | 
  
   கொண்டயம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   471  | 
  
   கள்ளிப்பட்டி  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   472  | 
  
   கணக்கம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   473  | 
  
   வளையபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   474  | 
  
   எரங்காட்டூர்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   475  | 
  
   குப்பாண்டம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   476  | 
  
   மாதையன்கோயிலூர்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   477  | 
  
   குளத்தூர்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   478  | 
  
   தோட்டக்குறியாம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   479  | 
  
   வெள்ளாளபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   கோபி   | 
 
| 
   480  | 
  
   ஆப்பாகூடல்  | 
  
   ஈரோடு   | 
  
   பவானி  | 
 
| 
   481  | 
  
   நாரபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பவானி  | 
 
| 
   482  | 
  
   தொட்டிபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பவானி  | 
 
| 
   483  | 
  
   செலம்பகவுண்டம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பவானி  | 
 
| 
   484  | 
  
   கண்ணடிபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பவானி  | 
 
| 
   485  | 
  
   ரட்டியபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   பவானி  | 
 
| 
   486  | 
  
   பூனாச்சி புதூர்  | 
  
   ஈரோடு   | 
  
   பவானி  | 
 
| 
   487  | 
  
   பொறையாபாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
    பவானி  | 
 
| 
   488  | 
  
   சாம்பள்ளி குளத்தூர்  | 
  
   சேலம்   | 
  
   மேட்டூர்   | 
 
| 
   489  | 
  
   சித்தூர்  | 
  
   சேலம்   | 
  
   எடப்பாடி   | 
 
| 
   490  | 
  
   இருப்பாளி   | 
  
   சேலம்   | 
  
   எடப்பாடி   | 
 
| 
   491  | 
  
   அக்கரைப்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   எடப்பாடி   | 
 
| 
   492  | 
  
   காப்பரத்தாம்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   எடப்பாடி   | 
 
| 
   493  | 
  
   வள்ளியாக்கவுண்டனூர்  | 
  
   சேலம்   | 
  
   எடப்பாடி   | 
 
| 
   494  | 
  
   இலவம்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   ஓமலூர்   | 
 
| 
   495  | 
  
   ஏருவாடி  | 
  
   சேலம்   | 
  
   ஓமலூர்   | 
 
| 
   496  | 
  
   குப்பம்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   ஓமலூர்   | 
 
| 
   497  | 
  
   விருத்தாசலம்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   ஓமலூர்   | 
 
| 
   498  | 
  
   வேங்கனூர்  | 
  
   சேலம்   | 
  
   ஓமலூர்   | 
 
| 
   499  | 
  
   குதிரைக்காரனூர்  | 
  
   சேலம்   | 
  
   ஓமலூர்   | 
 
| 
   500  | 
  
   செம்பனூர்  | 
  
   சேலம்   | 
  
   ஓமலூர்   | 
 
| 
   501  | 
  
   சிந்தாமணியூர்  | 
  
   சேலம்   | 
  
   ஓமலூர்   | 
 
| 
   502  | 
  
   கோமாளியூர்  | 
  
   சேலம்   | 
  
   ஓமலூர்   | 
 
| 
   503  | 
  
   சாமநாயக்கன்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   ஓமலூர்   | 
 
| 
   504  | 
  
   நெரிஞ்சிப்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   ஓமலூர்   | 
 
| 
   505  | 
  
   தாசம்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   506  | 
  
   ஓடத்துறை கட்டில்குடி  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   507  | 
  
   குள்ளனம்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   508  | 
  
   ஓடத்துறை நாய்க்கம்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   509  | 
  
   சோதாபுரம்  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   510  | 
  
   போடிநாயக்கன்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   511  | 
  
   சேலம்  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   512  | 
  
   அம்மாபேட்டை  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   513  | 
  
   முன்னம்பாளி   | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   514  | 
  
   கூட்டாத்துப்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   515  | 
  
   குருச்சி  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   516  | 
  
   பெத்தநாயக்கன்பாளையம்  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   517  | 
  
   ஆத்தூர்  | 
  
   சேலம்   | 
  
   ஆத்தூர்   | 
 
| 
   518  | 
  
   வண்ணக்கம்பாடி  | 
  
   திருவண்ணாமலை   | 
  
   செங்கம்   | 
 
| 
   519  | 
  
   பாப்பிரெட்டிப்பட்டி  | 
  
   தர்மபுரி   | 
  
   பாப்பிரெட்டிப்பட்டி  | 
 
| 
   520  | 
  
   மேட்டுப்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   521  | 
  
   அனுசேரிப்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   522  | 
  
   ஆட்டையாம்பட்டி வேலநத்தம்  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   523  | 
  
   வெண்ணந்தூர்  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   524  | 
  
   ஓலைப்பட்டி  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   525  | 
  
   மல்லூர்  | 
  
   சேலம்   | 
  
   சேலம்   | 
 
| 
   526  | 
  
   மசக்காளிபட்டி  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   527  | 
  
   சேங்கல்பாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   528  | 
  
   முத்துகாளிப்பட்டி  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   529  | 
  
   ராசிபுரம்  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   530  | 
  
   பட்டணம்  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   531  | 
  
   கோனாறுபட்டி  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   532  | 
  
   கோனாறுபட்டி காட்டூர்  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   533  | 
  
   பெரியக்காக்காவேரி  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   534  | 
  
   சின்னக்காக்காவேரி  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   535  | 
  
   மூலப்புதுப்பட்டி  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   536  | 
  
   வெள்ளக்கல்பட்டி  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   537  | 
  
   ராமகிரிப்பேட்டை  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   538  | 
  
   புதூர்  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   539  | 
  
   சேடர்பாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   540  | 
  
   வேளுக்குறிச்சி  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   541  | 
  
   தொப்பம்பட்டி  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   542  | 
  
   சீராப்பள்ளி  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   543  | 
  
   ஒடுவாங்குறிச்சி  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   544  | 
  
   ராமாயிப்பட்டி  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   545  | 
  
   கடந்தப்பட்டி  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   546  | 
  
   பாச்சல்  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   547  | 
  
   புதுச்சத்திரம்  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   548  | 
  
   தத்தையங்கார்பேட்டை  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   549  | 
  
   பெரியகளங்காணி   | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   550  | 
  
   குருசாமிபாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   ராசிபுரம்   | 
 
| 
   551  | 
  
   நாட்டார்மங்கலம்  | 
  
   நாமக்கல்   | 
  
   நாமக்கல்   | 
 
| 
   552  | 
  
   ஏளூர்  | 
  
   நாமக்கல்   | 
  
   நாமக்கல்   | 
 
| 
   553  | 
  
   நவக்காட்டூர்  | 
  
   நாமக்கல்   | 
  
   நாமக்கல்   | 
 
| 
   554  | 
  
   தழுவை  | 
  
   நாமக்கல்   | 
  
   நாமக்கல்   | 
 
| 
   555  | 
  
   எரணாபுரம்  | 
  
   நாமக்கல்   | 
  
   நாமக்கல்   | 
 
| 
   556  | 
  
   நல்லிபாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   நாமக்கல்   | 
 
| 
   557  | 
  
   இராசாம்பாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   நாமக்கல்   | 
 
| 
   558  | 
  
   பழையபாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   நாமக்கல்   | 
 
| 
   559  | 
  
   கந்தம்பாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   பரமத்தி   | 
 
| 
   560  | 
  
   கோனூர்  | 
  
   நாமக்கல்   | 
  
   பரமத்தி   | 
 
| 
   561  | 
  
   தாத்திபாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   பரமத்தி   | 
 
| 
   562  | 
  
   புளியம்பட்டி  | 
  
   நாமக்கல்   | 
  
   பரமத்தி   | 
 
| 
   563  | 
  
   காளிபாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   பரமத்தி   | 
 
| 
   564  | 
  
   கபிலமலை கருக்கம்பாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   பரமத்தி   | 
 
| 
   565  | 
  
   சித்தாளந்தூர்  | 
  
   நாமக்கல்   | 
  
   திருசெங்கோடு   | 
 
| 
   566  | 
  
   வட்டூர்  | 
  
   நாமக்கல்   | 
  
   திருசெங்கோடு   | 
 
| 
   567  | 
  
   கரியாம்பட்டி  | 
  
   நாமக்கல்   | 
  
   திருசெங்கோடு   | 
 
| 
   568  | 
  
   ஆனங்கூராம்பாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   திருசெங்கோடு   | 
 
| 
   569  | 
  
   ஊஞ்சப்பாளையம் ஆண்டிபாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   திருசெங்கோடு   | 
 
| 
   570  | 
  
   அல்லாலிபாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   திருசெங்கோடு   | 
 
| 
   571  | 
  
   கவுடிண்யாபாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   திருசெங்கோடு   | 
 
| 
   572  | 
  
   தொட்டிக்காரம்பாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   திருசெங்கோடு   | 
 
| 
   573  | 
  
   கொக்கறாம்பட்டி  | 
  
   நாமக்கல்   | 
  
   திருசெங்கோடு   | 
 
| 
   574  | 
  
   நட்டுவம்பாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   திருசெங்கோடு   | 
 
| 
   575  | 
  
   ராயாறுபாளையம்  | 
  
   நாமக்கல்   | 
  
   திருசெங்கோடு   | 
 
| 
   576  | 
  
   ஒருக்காமலை  | 
  
   சேலம்   | 
  
   சங்ககிரி   | 
 
| 
   577  | 
  
   மாணிக்கம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   ஈரோடு   | 
 
| 
   578  | 
  
   வீரப்பன்சத்திரம்  | 
  
   ஈரோடு   | 
  
   ஈரோடு   | 
 
| 
   579  | 
  
   ஈரோடு  | 
  
   ஈரோடு   | 
  
   ஈரோடு   | 
 
| 
   580  | 
  
   மோளைகவுண்டன்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   ஈரோடு   | 
 
| 
   581  | 
  
   எலையம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   மொடக்குறிச்சி   | 
 
| 
   582  | 
  
   வீரப்பம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   ஈரோடு   | 
 
| 
   583  | 
  
   ஆலங்காட்டுவலசு  | 
  
   ஈரோடு   | 
  
   ஈரோடு   | 
 
| 
   584  | 
  
   நாதகவுண்டம்பாளையம்  | 
  
   ஈரோடு   | 
  
   மொடக்குறிச்சி   | 
 
பின்னிணைப்பு
3 
ஆதியானந்த
குரு மடத்தின் சேவுகர்  அரசு அடையாள
வில்லை  
பின்னிணைப்பு
4 
பிற்கால
ஆதியானந்த குருஸ்வாமிகளின் சஞ்சார வசூல் ரிக்கார்டுகள் 
பின்னிணைப்பு 5
பிற்கால ஆதியானந்த
குருஸ்வாமிகளின் வரலாற்று பட்டயம் 
பின்னிணைப்பு 6 –
பிற்கால குருவான ஆதியானந்த குருஸ்வாமிகள்
பின்னிணைப்பு 7  – திருவள்ளுவர் வழி வந்த ஆதிக்குலகுருவான
குழந்தையானந்த குருஸ்வாமிகள்
கீழிருப்பது அவர்களது
ஜீவசமாதி (குருபூஜை இல்லாமல் உள்ளது) 
ஆதாரங்கள்
1.     
முடவாண்டார் பட்டயம், பக்கம் 253-260,
கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள், புலவர் செ,இராசு, 2008 
2.     
ஆதியானந்த குருக்கள் பட்டய நகல், கள்ள கவுண்டம்பாளையம் மற்றும்
ஊர்தொகை, சஞ்சார வரிவசூல் ஆவணங்கள் 
3.     
குழந்தையானந்த குருக்கள் மடத்து ஆவணங்கள்,
கள்ளகவுண்டம்பாளையம்
4.     
கலைமகள் பள்ளி அருங்காட்சியகம், ஈரோடு – சதாசிவராயர் கால
மொடக்குறிச்சி சத்தியமங்கல  கல்வெட்டு 
5.     
தென்னிந்திய குலங்களும் குடிகளும் எட்கர் தர்ஸ்டன் பாகம் 5 
6.     
கொங்கு நாடு, முத்துசாமி கோனார், 1924 
7.     
பொள்ளாச்சி உடுமலைபேட்டை பகுதி கொங்கு துளுவ பிள்ளை
மக்களின் நில ஆவணங்கள் 
ஆசிரியர்: திரு.சு.செந்தில்குமார், 
தேவநல்லூர்,பொள்ளாச்சி, கோவை 
வெளியீடு 
நடுநாட்டார் ஆய்வு மையம், தேவநல்லூர், 
உடுமலைபேட்டை